Sunday, July 26, 2026

"36" (இருள்-வெளி-ஒளி) - 5 - தில்லை செந்தில்பிரபு

ஆன்மதத்துவங்கள் : தன்மாத்திரைகளும் பஞ்சபூதங்களும்

முந்தைய அத்தியாயத்தில் மாயையைப் பற்றியும் அதன் வெளிப்பாடுகளான மாயேயங்களான 36 தத்துவங்களைப்  பற்றியும் சுருக்கமாகப் பார்த்தோம்.

மாயை என்பது ஆன்மாவை ஏமாற்றும் இருள் மட்டும் அல்ல.
அது இறை ஆன்மாவுக்கு அளித்த ஒரு கருவி.

“கதிர் வரும் வரை சுடர் விளக்கு” போல, பதிஞானம் உதிக்கும் வரை ஆன்மா நடந்து செல்ல மாயை ஒரு வெளிச்சம் தருகிறது என்று பார்த்தோம்.

இப்போது அந்த விளக்கின் ஒளியில், மாயையின் முதல் வெளிப்பாடுகளை நெருங்கிப் பார்க்கப் போகிறோம். இதுவரை கற்றதைத் தொகுத்துக் கொள்வோம்.

ஐந்தொழில் செய்வது யார் , ஏன், எப்படி ? - தாமல் கோ சரவணன்

தில்லை நடராஜரை நாம் தரிசனம் செய்கிறோம் . பொன்னம்பலத்தில் திருநடனம் புரியும் ஆடல் வல்லானின் அந்த அசைவைஆட்டத்தை "ஆனந்த தாண்டவம்" என்போம் . அடிப்படையில் அந்த தாண்டவம் உணர்த்தும் செய்தி ஒன்று தான் . அது சிவபெருமான் அருட்கருணையால் புரிகின்ற ஐந்தொழிலே ஆகும்  . தானே சொரூப லட்சணத்தில் இருந்து தடத்த லட்சணத்திற்கு இறங்கி உயிர்கள் உய்யும் பொருட்டு படைத்தல், காத்தல் , அழித்தல் , மறைத்தல் , அருளல் ஆகிய ஐந்தொழிலையும் தன்  பேராற்றலாலும் பெருங்கருணையாலும் செய்கிறேன் என்பதை தன்னுடைய ஆனந்த தாண்டவத்தில் உணர்த்துகிறார் . அவருடைய நான்கு கரங்களில் ஒன்று துடி என்னும் ஒருவகை டமருதத்தை தாங்கி இருக்கும் . அது படைத்தல் என்னும் தத்துவத்தின் அடையாளமாகும் . துடியை அசைக்க அதிலே  இருந்து ஒலி பிறக்கின்றது . துடி ஒன்றை தோற்றுவிக்கும் வினையை செய்வதால் அது படைத்தல் என்னும் தொழிலின் அடையாளமாக இருக்கின்றது . மற்றொரு கையில்  தகிக்கின்ற நெருப்பை ஏந்தி இருக்கிறார் . அது அழித்தலின் அடையாளமாய் இருக்கின்றது . இயல்பிலேயே நெருப்பானது தன்னை சேர்ந்த எல்லா வஸ்துக்களையும் எரித்து சாம்பலாக்கும் தன்முடையுடையது . அதனாலேயே நெருப்பானது அழித்தல் தத்துவத்தின் அடையாளமாக இருக்கின்றது . அருள் பாலிக்கும் விதமாக விளங்கும் வலது அபய கரம் காத்தல் தத்துவத்தின் அடையாளமாக விளங்குகின்றது .

துரியம் கடந்த சுடர் 9 - நால்வேதம் ஆறங்கமான ஞானச்சுடர்

                                                                         [1]

நம் பாரதத்தின் தென்பகுதியில் பல லட்சம் வருடங்களுக்கு முன் வாழ்ந்து வந்த தொல்மானுட மூதாதை கண்ட முதல் தெய்வ வடிவம் என ‘சுயம்பு லிங்க'த்தை கண்டோம். அதுவே மானுடம் கண்ட ஆதி தெய்வ வடிவாக இருக்கச் சாத்தியமென இரு கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டன.

சித்தாந்த வினா விடை - 9 - அருணைவடிவேல் முதலியார்

பசுவின் தன்னியல்பு

மாணவன்:
இப்போது உயிர்களின் இயல்பும், பொதுவான தன்மைகளும் என்ன என்பதை விளக்குங்கள்.

ஆசிரியர்:
இறைவனைப் போலவே, உயிரும் அறிவுடைய பொருளாகும். அதனால் அதற்கும் விருப்பம் (இச்சை), அறிவு (ஞானம்), செயல் (கிரியை) ஆகிய மூன்று ஆற்றல்களும் உள்ளன. எனவே, இறைவனுக்கு இருப்பதுபோல உயிருக்கும் இச்சை, ஞானம், கிரியை ஆகிய சக்திகள் உள்ளன.

மருந்து - அனைய் கிரீசன்

 

அருளினால் உரைத்த நூலின் வழிவாரா ததன்மஞ் செய்யின்   

இருளுலா நிரயத் துன்பத் திட்டிரும் பாவந் தீர்ப்பன்  

பொருளுலாஞ் சுவர்க்க மாதி போகத்தாற் புணியந் தீர்ப்பன்   

மருளுலா மலங்கள் தீர்க்கும் மருந்திவை வயித்ய நாதன்

சிவஞானசித்தியார்

சைவ சித்தாந்த பெருநெறி நிச்சயிக்கும் பொருள்கள் மூன்றினுள் பதியாகிய இறைவன் நிறைவு பொருள், பரிபூரணத்துவத்துடன் பிரபஞ்சம் கடந்தும் கலந்தும் ஒளிவிடும் தேசன். பாசமாகிய ஆணவம் குறைவு பொருள், கீழாம் தன்மைபடுத்தும் குணமுடையது. பசுவாகிய உயிர் இவை இரண்டையும் சாரும் பொருள், அது ஒருபொருளின் சார்பு இன்றி தனித்து நில்லாது. இவ்வாறு இருக்க உயிர் குறைவாம் பாசத்தை சார்ந்து இருக்கும் நிலை கேவல அவத்தை எனவும், நிறைவாம் பதியை சார்ந்து இருக்கும் நிலை சுத்த அவத்தை எனவும், இரண்டிற்கும் இடைபட்ட நிலையை சகல அவத்தை எனவும் சைவ சித்தாந்தம் எடுத்துக்கூறும். உயிரின் இயல்பாவது சார்ந்ததன் வண்ணம் பெறுதல் தண்ணீர், ஸ்படிகம் போல உயிர் ஆணவ மலத்தை சார்ந்து இருப்பதால் அதன் வியாபக அறிவானது கீழ்படுத்தப்பட்டும், மறைக்கப்பட்டும் தன்நிலை அறியாது பொலிவிழந்து குன்றிகிடக்கிறது. இந்த இயலாமை என்பதே உயிர் உற்ற நோய். சிற்றின்பத்தை பேரின்பமாக எண்ணி பேதித்து இருப்பதுவும் துன்பத்தால் வருத்தப்படுவதுவும் இன்நோயின் தாக்கமே