அருளினால்
உரைத்த நூலின் வழிவாரா ததன்மஞ் செய்யின்
இருளுலா
நிரயத் துன்பத் திட்டிரும் பாவந் தீர்ப்பன்
பொருளுலாஞ்
சுவர்க்க மாதி போகத்தாற் புணியந் தீர்ப்பன்
மருளுலா
மலங்கள் தீர்க்கும் மருந்திவை வயித்ய நாதன்
சிவஞானசித்தியார்
சைவ சித்தாந்த
பெருநெறி நிச்சயிக்கும் பொருள்கள் மூன்றினுள் பதியாகிய இறைவன் நிறைவு பொருள், பரிபூரணத்துவத்துடன்
பிரபஞ்சம் கடந்தும் கலந்தும் ஒளிவிடும் தேசன். பாசமாகிய
ஆணவம் குறைவு பொருள், கீழாம் தன்மைபடுத்தும் குணமுடையது. பசுவாகிய உயிர்
இவை இரண்டையும் சாரும் பொருள், அது ஒருபொருளின் சார்பு இன்றி தனித்து நில்லாது. இவ்வாறு
இருக்க உயிர் குறைவாம் பாசத்தை சார்ந்து இருக்கும் நிலை கேவல அவத்தை எனவும்,
நிறைவாம் பதியை சார்ந்து இருக்கும் நிலை சுத்த அவத்தை எனவும், இரண்டிற்கும்
இடைபட்ட நிலையை சகல அவத்தை எனவும் சைவ சித்தாந்தம் எடுத்துக்கூறும். உயிரின்
இயல்பாவது சார்ந்ததன் வண்ணம் பெறுதல் தண்ணீர், ஸ்படிகம் போல உயிர் ஆணவ மலத்தை
சார்ந்து இருப்பதால் அதன் வியாபக அறிவானது கீழ்படுத்தப்பட்டும், மறைக்கப்பட்டும்
தன்நிலை அறியாது பொலிவிழந்து
குன்றிகிடக்கிறது. இந்த இயலாமை என்பதே உயிர் உற்ற நோய். சிற்றின்பத்தை
பேரின்பமாக எண்ணி பேதித்து இருப்பதுவும் துன்பத்தால் வருத்தப்படுவதுவும் இன்நோயின்
தாக்கமே