Thursday, July 3, 2025

வினைக் கொள்கை - 1 - தாமல் கோ.சரவணன்

உடம்பை பற்றிய ஆராய்ச்சி இன்றைக்கு  அறிவியலில் மேம்பட்டு இருக்கிறது. உள்ளத்தை பற்றிய ஆராய்ச்சி உளவியல் என்கிற அடிப்படையிலே கொஞ்சம் கடினமானதாகக்  கையாளப்படுகிறது   . அதேசமயம்  உயிரை பற்றிய ஆராய்ச்சி என்பது அறிவியலில்  பூஜ்யத்தில் தான் இன்னும் தேங்கி நிற்கிறது . அதற்கு முதல் காரணம் அறிவியல் உயிர் என்ற ஒன்று தனித்து இருப்பதாக நம்பவில்லைஅது  உடம்பின் உயிர்ப்பு நிலை; உடம்பு உயிர்ப்பற்ற நிலை என்ற இரண்டினோடு நிற்கிறது. மேலும்  உடம்பு உயிர்ப்போடு இருக்க உயிர் என்ற ஒன்று அதனுள் இருக்கிறது உடம்பு உயிர்ப்பற்ற நிலையில் அந்த உயிர் உடம்பை  விட்டு வெளியேறிவிடுகிறது என்ற உயிர் மைய கோட்பாட்டை அறிவியல் நிராகரிக்கிறது.

சித்தாந்த அறிஞர்கள் - சூளை சோமசுந்தரநாயகர்

பாஸ்கர சேதுபதி மன்னர் அவர்களால் வைதீக சைவ சித்தாந்த சண்ட மாருதம் என்னும் விருதளிக்கப்பட்டதோடு சிறப்பிக்கப்பட்டவர் சூளை சோமசுந்தர நாயகர். திருவாவடுதுறை ஆதீன மடாதிபதியால் "பரசமயக் கோளரி" (மற்ற சமயங்களை வாதில் வென்றவர் என்ற பொருள்படும்) என்னும் பட்டமளிக்கப்பட்டு பாராட்ட பெற்றவர் சபையோர்களால் "சைவ மார்த்தாண்டன்" என சிறப்பிக்கப்பட்டவர். 

துரியம் கடந்த சுடர் - 4 - அருணாச்சலம் மகாராஜன்

துரியம் கடந்த சுடர் 1

துரியம் கடந்த சுடர் 2

துரியம் கடந்த சுடர் 3


“நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?”

“ஆம், குழந்தை... உன்னைக் காண்பதைப் போலவே அவரைக் கண்டிருக்கிறேன். உன்னை காண்பதை விட இன்னும் தீர்க்கமாக, இன்னும் அழுத்தமாக, இன்னும் தெளிவாக”.

சத்திநிபாதம் - கோமதி சூரியமூர்த்தி

உயிர்கள் இறைவனை உணரெவாட்டாமல் மலத்தால் பிணிக்கப்பட்டுள்ளன. உயிர்களதும் மலம் பரிபாகமடைதற்பொருட்டு அம்மலத்திற்கு அனுகூலமாய் நின்று ஆன்மாக்களை நடத்தி வருவது சிவபெருமானது திரோதான சக்தி என்னும் மறக்கருணை ஆகும். (திரோதான சக்தி என்பது சைவ சித்தாந்தத்தில் இறைவனின் பஞ்ச கிருத்தியங்களுள் (ஐந்து செயல்கள்) ஒன்று. இது உயிர்களை உலக அனுபவங்களில் ஆழ்த்தி, அவற்றின் உண்மை நிலையான இறைவனை மறக்கச் செய்யும் ஒரு சக்தியாகும். மறைத்தல் தொழிலைச் செய்யும் இந்த சக்தி, உயிர்கள் பக்குவமடைந்த பின், அருட்சக்தியாக மாறி, அவர்களை இறைவனை அடையச் செய்கிறது)

சித்தாந்த வினா விடை- தொடர் 4 - அருணைவடிவேல் முதலியார்

 

 சித்தாந்த வினா விடை 3

சித்தாந்த வினா விடை 2

 சித்தாந்த வினா விடை 1


அனுமான அளவையின் வகை


இனி, காணப்பட்ட ஏதுவைக்கொண்டு காணப்படாத துணிபொருளை உணர்வதாகிய அனுமான அளவை,தன் பொருட்டு அனுமானம், பிறர் பொருட்டு அனுமானம்' என இருவகைப்படும்.