Monday, January 26, 2026

"36" (இருள்-வெளி-ஒளி) - 3 - தில்லை செந்தில்பிரபு

     "36" (இருள்-வெளி-ஒளி) - 1



உங்கள் வாழ்க்கையைக் கட்டிப் போட்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கயிறு!

நம் வாழ்க்கையில் அவ்வப்போது இப்படிப்பட்ட கேள்விகள் நமக்குள் வரும்:

  • “நான் நினைத்ததை அடைய இடைவிடாமல் முயற்சி செய்கிறேன். என்ன சரி, என்ன தவறு என்பதும் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும், நினைத்தது ஏன் நடப்பதில்லை? ஒரு சிலருக்கு மட்டும் எந்த முயற்சியுமே இல்லாமல் எல்லாம் வசப்படுகிறதே, அது எப்படி?"
  • "எனக்கு வரும் கஷ்டங்கள் போல வேறு யாருக்கும் இல்லையே? அப்படி என்ன மகா தவறு செய்துவிட்டேன்?"
  • ​“என் முயற்சி போதவில்லையா? அல்லது என் முயற்சிகள் செல்லுபடியாகாத வேறு ஏதோ ஒரு தளம் இங்கே இருக்கிறதா?”

ஐந்தொழில் - தாமல் கோ சரவணன்

இறைவன் புரியும் ஐந்தொழில் - அறிமுகம்

"mass and energy cannot be created or destroyed" "இல்லது தோன்றாது ; உள்ளது அழியாது" 

ஒரு பொருள் இந்த உலகில் தோற்றம் , இருப்பு , மறைவு ஆகிய மூன்று நிலைகளை கொண்டதாக உள்ளதை  அறிவியலின் பார்வையில் இருந்து அறிகிறோம் . ஒரு பொருள் தோன்றுவதும் , அழியும் வரை அது இருப்பதும் பின் அது அழிவதுமான இந்த மூன்று நிலைகளை கடந்ததும் அல்லது இந்த மூன்று நிலைகளுக்குள் வராத போது அந்த பொருள் என்னவாக இருக்கிறது, இருந்தது என்பதை பல்லாண்டுகளுக்கு முன்னால்  சித்தாந்தம் மட்டுமே விளக்க முயற்சித்திருக்கிறது. தோற்றம்தான் ஒரு பொருளின் ஆரம்பம் என்பது பொதுவான நம்பிக்கை  சித்தாந்தம் அதனை ஏற்பதில்லை, அழிவுதான் ஒரு பொருளின் இறுதி நிலை என்பதும் பொதுவான நம்பிக்கை  சித்தாந்தம்  அதனையும்   அப்படி கையாள்வதில்லை. இந்த விஷயத்தில் தற்கால இயற்பியலின் கோட்பாட்டோடு மிக நெருங்கிய விளக்கத்தை சித்தாந்தம் மட்டுமே சொல்லியிருக்கிறது.

துரியம் கடந்த சுடர் 7 - பழைமைப் பெருஞ்சுடர்

சித்தாந்த வினா விடை - தொடர் 7 - அருணைவடிவேல் முதலியார்

நாதன் நடம்- உமா பாரதி

சிவாலயங்களில்  நடராஜப் பெருமான் சந்நிதிக்குச் செல்லும் பொழுது இனம் புரியாத ஒரு உணர்வு வந்து ஆட்கொள்வதை சிவவழிபாட்டில் இருக்கும் அனைவரும் உணர்ந்திருப்போம். ஒருவித ஆனந்தம், ஒருவித  பெருமிதம், ஒருவித ஆச்சரியம், ஒருவித பயம், ஒருவித வேதனை, ஒருவித உவகை, ஒருவித அன்பு என்று பலவிதமான உணர்வுகள் கலந்து வந்து உள்ளம் உருக கண்களிலிருந்து கண்ணீர் பெருகும். மற்றவர்கள் அறியாவண்ணம் கண்ணீரைத் துடைத்து விட்டு நடராஜப் பெருமானை மனம் நெகிழ வழிபட்டு மகிழ்வோம். ஒவ்வொரு முறையும்  நடராஜப் பெருமானை வழிபடும் பொழுது, இந்த உணர்வு மேலும் மேலும் அதிகரிப்பதை நம்மால் உணரமுடியும். ஏன் இப்படி? நடராஜப் பெருமானின் திருமேனியில் அப்படியென்ன மாயாஜாலம் இருக்கிறது? ஏன் நம் உள்ளம் உருகுகிறது? நம் கண்களிலிருந்து வழியும் அந்த கண்ணீருக்குக் காரணம்தான் என்ன? சாத்திரம் என்ன சொல்லுகிறது?