Tuesday, November 18, 2025

"36" (இருள்-வெளி-ஒளி) - 2 - தில்லை செந்தில்பிரபு

    "36" (இருள்-வெளி-ஒளி) - 1

நமது முந்தைய அத்தியாயத்தை, "சிந்திப்பதால் நான் இருக்கிறேனா? அல்லது இருப்பதால் சிந்திக்கிறேனா?" என்ற ஆழமான கேள்வியில் இருந்து ஆரம்பித்தோம். அத்துடன், சைவ சித்தாந்தம் எந்தக் காலகட்டத்தில் உருவானது, அது இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்களுடனும் மற்றும் பிற அக/புறச் சமயங்களுடனும் எவ்வாறு இணைகிறது என்பதைப் பார்த்தோம். சித்தாந்தத்தின் மையமான பதி, பசு, பாசம் என்ற மூன்று அடிப்படை உண்மைகளைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தினோம்.

வினைக் கொள்கை தொடர் - 3 - தாமல் கோ.சரவணன்

 வினைக் கொள்கை - 1

வினைக் கொள்கை - 2

இந்த மனித வாழ்க்கை மிக ஆச்சர்யமாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதை நாம் பலமுறை உணரலாம். ஒரே நாளில் ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. ஒன்று அதன் நான்கு தலைமுறைக்கு வேலையே செய்யாமல் சுகபோகமாக வாழும் எல்லா வசதியும் கொண்ட பணக்கார வீட்டில் பிறக்கிறது. இன்னொரு குழந்தை அடுத்த நாள் சாப்பாட்டிற்காக கடுமையாக உழைக்கும் ஏழையின் வீட்டில் பிறக்கிறது. ஒரு பிறப்புதான் ஆனால் அது எங்கே பிறக்கிறது, யார் வீட்டில் பிறக்கிறது, எப்படி பிறக்கிறது என்பதில் தான் அதன் மொத்த வாழ்க்கையும் இருக்கிறது. பணம் என்பது மட்டுமல்ல ஒரு குழந்தை எப்போதும் சண்டை போட்டு ஆளுக்கொரு திசையில் போகும் பெற்றோருக்குப் பிறந்து அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்குகிறது . இன்னொரு குழந்தை தங்கமாய் தாங்கி பாலூட்டி சீராட்டி அப்பாவும் அம்மாவும் மாறி மாறி அன்பு செய்யும் குடும்பத்தில் பிறக்கிறது. அந்தக்  குழந்தை ஏன் பணக்கார வீட்டில் பிறந்ததது இந்தக்  குழந்தை ஏன் ஏழை வீட்டில் பிறந்தது. அந்தக்  குழந்தை ஏன் அன்பில்லா வீட்டில் பிறந்தது இந்தக்  குழந்தை ஏன் அன்புடைய வீட்டில் பிறக்கிறது என்பதான கேள்விகள் நம் எல்லாருக்கும் இருக்கும் .

ஏகன் - உ. முத்துமாணிக்கம்

சிவத்தை அறியும் ஞானத்திற்கு திறவு கோலாக

இருப்பவை உபநிஷத்துக்களின் மகா

வாக்கியங்களாகும்.


பிரக்ஞானம் பிரம்மம் - அறிவே பிரம்மம் என்றும்


அகம் பிரம்மாஸ்மி -  நான் பிரம்மம் என்றும் 

தத்வமஸி - நீ அதுவாய் இருக்கின்றாய் என்றும் 

அயம் ஆத்மா பிரம்மம் - இந்த ஆத்மாவே பிரம்மம் என்று கூறுகின்றன.

சித்தாந்த வினா விடை - 6 - அருணைவடிவேல் முதலியார்

சித்தாந்த வினா விடை 1

சித்தாந்த வினா விடை 2

சித்தாந்த வினா விடை 3

சித்தாந்த வினா விடை 4

சித்தாந்த வினா விடை 5

சித்தாந்தத் தொகைப் பகுதி


சித்தாந்தப் பொருளைப் பிறமதப் பொருள்களோடு  வைத்து விரிவாக ஆய்ந்துணர்வதற்கு முன், அதனைத் தொகை முறையில் முதலில்  உணர்தல் வேண்டும்.