உங்கள் வாழ்க்கையைக் கட்டிப் போட்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கயிறு!
நம் வாழ்க்கையில் அவ்வப்போது இப்படிப்பட்ட கேள்விகள் நமக்குள் வரும்:
- “நான் நினைத்ததை அடைய இடைவிடாமல் முயற்சி செய்கிறேன். என்ன சரி, என்ன தவறு என்பதும் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஆனாலும், நினைத்தது ஏன் நடப்பதில்லை? ஒரு சிலருக்கு மட்டும் எந்த முயற்சியுமே இல்லாமல் எல்லாம் வசப்படுகிறதே, அது எப்படி?"
- "எனக்கு வரும் கஷ்டங்கள் போல வேறு யாருக்கும் இல்லையே? அப்படி என்ன மகா தவறு செய்துவிட்டேன்?"
- “என் முயற்சி போதவில்லையா? அல்லது என் முயற்சிகள் செல்லுபடியாகாத வேறு ஏதோ ஒரு தளம் இங்கே இருக்கிறதா?”


