ஒரு ஞானப் பயணம்
குரு பௌர்ணமி நாளன்று, நண்பர் முத்துமாணிக்கம் சைவ சித்தாந்தத்தின் 36 தத்துவங்கள் குறித்து ஒரு தொடர் எழுதுமாறு வேண்டினார். இது வெறும் வேண்டுகோளாக இல்லை; எனக்கு அது இறையாணையாகவே தோன்றியது. உடனே மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன்.
ஒரு ஞானப் பயணம்
குரு பௌர்ணமி நாளன்று, நண்பர் முத்துமாணிக்கம் சைவ சித்தாந்தத்தின் 36 தத்துவங்கள் குறித்து ஒரு தொடர் எழுதுமாறு வேண்டினார். இது வெறும் வேண்டுகோளாக இல்லை; எனக்கு அது இறையாணையாகவே தோன்றியது. உடனே மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன்.
வினை என்று நாம் பொதுவாகச் சொல்லும் கன்மம் உண்மையில் நம் நன்மைக்காகவே உண்டாகின்றது. பொதுவில் ஆணவம் , கன்மம், மாயை என்று மும்மலங்களில் ஒன்றாக கன்மம் சொல்லப்பட்டாலும் உண்மையில் உயிரைப் பற்றியிருக்கிற ஆணவ மலத்தை நீக்குவதற்காகவே இறைவன் கன்மம் ,மாயை என்றவற்றை உயிருக்கு கூட்டுகிறான். கூட்டுவது அவனாயினும் கூடும் அளவும் ஸ்திரமும் உயிர்கள்தான் செய்து கொள்கின்றன. உயிர்களுக்கு உடம்பை எடுத்த பின்னும் சரி தவறு என்பதை உணரும் அறிவும், நல்லது கெட்டது என்று எதன் மேல் பிரியம் வைக்க வேண்டும் என்ற இச்சையும் அதற்கான செயலை செய்யும் தன்மை இருப்பினும் அதனை செய்ய விடாமல் ஆன்மாவை அறியாமையிலேயே அழுத்துவதே ஆணவத்தின் தன்மை. உயிரின் அறிவு இச்சை செயல் போன்றவற்றை ஆணவமானது மறைக்குமே ஒழிய அழிக்காது. அவ்வாறு மறைத்து நிற்கும் ஆணவத்தை விளக்குவதே கன்மம் தான். ஆணவம் என்கிற எதிராளியின் கூட்டாளியாய் இருக்கிற கன்மம் எப்படி எதிராளியையே அழிக்கும் என்று நமக்கு தோன்றும். இந்த இடத்தை நாம் குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
[1]
எழுத்தாளர் ஜெயமோகன் அவ்வப்போது கட்டண உரைகள் நிகழ்த்துவார். ஏதேனும் ஒரு மைய கருத்தை வைத்துக் கொண்டு அரங்கில் பேசப்பேச அவற்றை விரிவாக்கி, ஒன்றில் இருந்து மற்றொரு கருத்து எனத் தொட்டு தொட்டு விரிந்து செல்லும் பேச்சு, முடிக்கையில் ஒரு பெருங்கோலம் நம்முன் தீட்டியிருக்கும். வெறும் ஐந்து அல்லது ஆறு வரி குறிப்புகளுடன் தான் அவர் அரங்கிற்கே வருவார். மீதி அனைத்தும் அரங்கில் இருக்கும் நம்முன், அங்கேயே சிந்தித்து அங்கேயே நிகழும். பேச்சு என்ற ஊடகத்தின் மூலம் பார்வையாளர்கள் முன், பார்வையாளர்களின் முழுமையான கவனத்தையும், உற்சாகமான பங்கேற்பையும் கோரும் கதகளி போன்றதொரு செவ்வியல் நிகழ்த்துக் கலை அந்த உரைகள். மானசீகமாக அரங்கில் உள்ள ஒவ்வொருவருடனும் உரையாடுவார் அவர்.
அளவைகளும் மதங்களும்
'காட்சி, கருதல், உரை' என்னும் மூவகை அளவைகளில், உலகாயதர் காட்சியளவை (பிரத்தியட்சப் பிரமாணம்) ஒன்றை மட்டுமே ஏற்றுக்கொள்வர். ஏனைய அளவைகளை ஏற்க மாட்டார்கள்.